காஜல் அகர்வாலின் முதல் உதட்டு முத்தத்தில் ஒளிந்துள்ள ரகசியம்

  • IndiaGlitz, [Tuesday,May 17 2016]
கோலிவுட், டோலிவுட் ஆகிய திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் இதுவரை முத்தக்காட்சியில் குறிப்பாக லிப்கிஸ் காட்சியில் நடித்ததில்லை. விஜய்யின் 'துப்பாக்கி' படத்தில் ஒரு முத்தக்காட்சி வருவது போல் தோன்றும். ஆனால் வராது. இந்நிலையில் பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்த காஜல் அகர்வால் அவருக்கே தெரியாமல் ஒரு லிப்கிஸ் காட்சியில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரன்தீப் ஹூடா, காஜல் அகர்வால் நடித்து வரும் ரொமான்ஸ் படம் Do Lafzon Ki Kahani'. தீபக் டிஜோரி இயக்கி வரும் இந்த படத்தின் எமோஷலான காதல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தபோது திடீரென ரன்தீப், காஜல் அகர்வாலுக்கு உதட்டு முத்தம் கொடுத்ததாகவும், இதை சற்றும் எதிர்பார்க்காத காஜல் அதிர்ச்சியாகி உடனே தன்னை விடுவித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த காட்சி குறித்து காஜல் அகர்வாலிடம் முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய காஜல், இந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டின்படி இந்த காட்சி முக்கியமானது என்று கூறி காஜலை இயக்குனர் சமாதானப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தில் காஜலின் லிப்கிஸ் காட்சி இடம்பிடித்துள்ளதா? இல்லையா? என்பதை படம் பார்த்துதான் ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

More News

ரஜினியை கடத்த திட்டமா?

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பாராட்டும் கண்டனங்களையும் பெற்று வருவது வாடிக்கையே...

இராஜபாளையம் பெண்களின் அழகை ரசித்தேன். விஷால்

விஷால், ஸ்ரீதிவ்யா, நடிப்பில் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ள 'மருது' திரைப்படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்புகள் இராஜபாளையத்தில்தான் நடைபெற்றது...

பிளஸ் 2 மாணவர்களுக்கு நடிகர் சதீஷ் அறிவுரை

இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொண்டு வருகின்றனர்...

'தெறி'யை அடுத்து பஸ்ஸில் பிடிபட்ட 'மனிதன்'

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் சட்டவிரோதமாக பேருந்தில் ஒளிப்பரப்பாகியதை விஜய் ரசிகர் ஒருவர்...

சூர்யா எழுதிய மன்னிப்பு கடிதம்

நடிகர் சூர்யாவின் '24' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அவர் ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதியுள்ளார்...